follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP1பேக்கரி உணவுகளின் விலைகள் அதிகரிக்கலாம்! - பேக்கரி உரிமையாளர் சங்கம்!

பேக்கரி உணவுகளின் விலைகள் அதிகரிக்கலாம்! – பேக்கரி உரிமையாளர் சங்கம்!

Published on

பேக்கரி உணவுகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலைகள் பலமடங்கு அதிகரித்துள்ளதனால் பேக்கரி உரிமையாளர்கள் அதிக சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாகவும், இந்நிலைமை தொடருமானால் பேக்கரி உணவுகளின் விலைகளும் அதிகரிக்கலாம் எனவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் 50 கிலோகிராம் கோதுமை மா பொதியொன்றின் விலை தற்பொழுது 1000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விலைகள் அதிகரித்தால் பொதுமக்களை அது வெகுவாக பாதிக்கும் என தெரிவித்த அவர் தற்போது நிலவும் நெருக்கடி நிலைமை காரணமாக சுமார் 3000 பேக்கரிகள் அளவில் மூடப்படும் நிலைக்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...