follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுபெட்ரோல் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

பெட்ரோல் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

Published on

நாளாந்த பெட்ரோல் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்றைய தினம் 1500 மெட்ரிக் தொன் பெட்ரோல் மாத்திரமே நாடளாவிய ரீதியில் பகிர்ந்தளிக்கப்படுவதாக பெட்ரோலிய மொத்த களஞ்சியசாலையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் நாளாந்தம் 2500 மெட்ரிக் தொன் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டது.

எனினும், தற்போது பெட்ரால் தொகை குறைவடைந்து செல்வதால், வரையறைகளுக்கு உட்பட்டு அதனை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இன்றைய தினம் 5000 மெட்ரிக் தொன் டீசல் நாடளாவிய ரீதியில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

டீசல் விநியோகம் எவ்வித சிக்கலுமின்றி முன்னெடுக்கப்படுவதாக பெட்ரோலிய மொத்த களஞ்சியசாலையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தனிநபர்கள் அல்லது நிறுவனத்திற்கு தேவைக்கு அதிகமான எரிபொருளை சேமித்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசு நெல்லுக்கான நிர்ணய விலையை அறிவித்தது

ஒரு கிலோ நெல்லுக்கு வழங்கப்படும் விலைகளை அரசாங்கம் இன்று (05) நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் அறிவித்துள்ளது. விவசாயிகளிடமிருந்து நாளை...

இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். பெப்ரவரி 9 ஆம் திகதி முதல்...

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பம் [நேரலை]

இன்று (05) நடைபெறவிருந்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் காலை 9.30 மணிக்குத் தொடங்கின.