follow the truth

follow the truth

September, 27, 2024
Homeஉள்நாடுசுற்றுலா பயணிகளின் எரிபொருள் பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள்! - ஜனாதிபதி வலியுறுத்தல்!

சுற்றுலா பயணிகளின் எரிபொருள் பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள்! – ஜனாதிபதி வலியுறுத்தல்!

Published on

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எரிபொருள் தட்டுப்பாட்டினால் பெரும் அசெளகர்யங்களை எதிர்கொள்வதால் அதனை தீர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்று கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சுற்றுலாத்துறை அமைச்சுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொவிட் தொற்றுநோயால் முடங்கியிருந்த சுற்றுலா கைத்தொழில், மீண்டும் இயல்பு நிலைக்கு மாறி வருகையில் ஏற்பட்ட நெருக்கடியான நிலைமை காரணமாக மீண்டும் அது வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும் பிறநாடுகளிடம் உள்ள இலங்கை பற்றிய தவறான கருத்துக்களை தூதரகங்கள் மூலம் சரிசெய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இக் கலந்துரையாடலில் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அனுர திஸாநாயக்க, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.ஏ. சூலானந்த பெரேரா, துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு அறிவிப்பு

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பயன்படுத்திய அனைத்து உத்தியோகபூர்வ இல்லங்களை உடனடியாக மீள ஒப்படைக்குமாறு பொது நிர்வாக...

பொதுத்தேர்தலுக்கான அச்சுப் பணிகள் ஆரம்பம்

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான அச்சுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகத்தின் பிரதானி கங்கானி கல்பனா லியனகே...

ஐக்கிய மக்கள் சக்தியின் பதவிகளில் மாற்றம்

2024 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த...