follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுவெள்ளை வேன்களுக்கு பதிலாக மோட்டார் சைக்கிள் பயன்படுத்தி கொலைகள் - சஜித்

வெள்ளை வேன்களுக்கு பதிலாக மோட்டார் சைக்கிள் பயன்படுத்தி கொலைகள் – சஜித்

Published on

கடந்த காலங்களில் வெள்ளை வேன்களை பயன்படுத்தி செய்யப்பட்ட கொலைகள் தற்பொழுது மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றனாவா என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

வீதியில் இருக்கும் மக்கள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடாத்தப்படுவதாகத் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பகலில் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாகவும் இதுவா ராஜபக்ச ஜனாதிபதி உறுதியளித்த தேசியப் பாதுகாப்பு என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வாறு உயிரிழந்த சிலர் முக்கியமான வழக்குகளின் அரசாங்க சாட்சியாளர்கள் என கேள்விபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களின் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் சாட்சியாளர்களே இவ்வாறு படுகொலை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

தேசியப் பாதுகாப்பினை உறுதி செய்வதாக உறுதியளித்து ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கம் இன்று தேசியப் பாதுகாப்பினை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும் பிட்டிய வளைவுக்கு அருகில் இன்று (22) பிற்பகல் இரண்டு தனியார் பயணிகள் பஸ்கள்...

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை...

பொதுத் தேர்தல் – தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் அதிகரிப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலை விட எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக...