பிரபல பாடகர் கே.கே மரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடிக்கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு கே.கே என்று அழைக்கப்படும் பாடகர் கிருஷ்ண குமார் குன்னத் காலமானார் .
இவர் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில், நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.
கே.கே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் திரை உலகத்தை சேர்ந்த பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.