இரத்தினபுரி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி கலவான, இரத்தினபுரி, எலபாத்த, குறுவிட்ட மற்றும் எஹெலியகொடை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியுள்ள, பெல்மடுல்ல, அயகம மற்றும் நிவித்திகல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, புளத்சிங்கள, வலக்காபொல, கேகாலை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும், செம்மஞ்சள் நிற அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர மற்றும் கொடபொல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு செம்மஞ்சள் நிற அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்கை மற்றும் பாதுக்க ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும், கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரள பிரதேச செயலக பிரிவுக்கும், நுவரெலிய மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலக பிரிவுக்கும், மஞ்சள் நிற அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், காலி மாவட்டத்தின் நாகொடை, பத்தேகம மற்றும் யக்கலமுல்ல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர, புளத்சிங்கள வலல்லாவிட்ட மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மஞ்சள் நிற அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை, தெரணியகல மற்றும் றுவன்வெல்ல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மழையுடனான வானிலைக்காரணமாக களு கங்கை, நிலவளா கங்கை மற்றும் அத்தனகளு ஓயா ஆகியன பெருக்கெடுத்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.