follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுமறைத்து வைக்கப்பட்டிருந்த எரிபொருளுடன் ஒருவர் கைது

மறைத்து வைக்கப்பட்டிருந்த எரிபொருளுடன் ஒருவர் கைது

Published on

பிலியந்தலை, சுவாரபொல பிரதேசத்தில் உள்ள வர்த்தக வளாகம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எரிபொருளுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் 31 வயதுடைய அதே பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் பிலியந்தலை எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் மகன் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடம் இருந்து 180 லீற்றர் டீசல், 7 லீற்றர் பெற்றோல் மற்றும் எரிபொருளை எடுப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நபர் டீசல் ஒரு போத்தல் 600 ரூபாவுக்கும், பெற்றோல் ஒரு போத்தல் 700 ரூபாவுக்கும் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேக நபர் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...