எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் தனது பதவியை இராஜினாமா செய்வதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இதையடுத்து, எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி தொடக்கம், பாதுகாப்பு படைகளின் புதிய பிரதானியாக அவர் கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளார்.
மேலும் , மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, எதிர்வரும் முதலாம் திகதி, புதிய இராணுவத் தளபதியாக பதவியேற்பார் என இராணுவம் தெரிவித்துள்ளது.