follow the truth

follow the truth

April, 22, 2025
Homeஉள்நாடுஇலங்கை ஆசிரியர் சேவை சங்கம் முன்வைத்துள்ள அதிரடி கோரிக்கை

இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் முன்வைத்துள்ள அதிரடி கோரிக்கை

Published on

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பணிக்குழாமினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவு, உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் செயலாளர் மஹிந்த ஜயசிங்க கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பணிக்குழாமினருக்கு வழங்கப்படும் குறைந்தளவான கொடுப்பனவை ஏற்றுக்கொள்ள முடியாது.

எரிபொருள் விலையேற்றம் பாரிய சுமையினை ஏற்படுத்தியுள்ளது.

எனவே வழங்குவதற்கு தீர்மானித்துள்ள கொடுப்பனவில் உடனடியாக திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும்.

அதேநேரம், பரீட்சை நிறைவுறும் வரையில் எரிபொருள் விலையை அதிகரிக்காதிருப்பதுடன், பரீட்சார்த்திகள் மற்றும் பணிக்குழாமினருக்கு எரிபொருள் தடையின்றி கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

”ஸ்ரீ தலதா வழிபாட்டிற்கு” வரும் பக்தர்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

புனித தலதா மாளிகைக்கு வழிபாட்டிற்காக வரும் பக்தர்கள், பொலிதீன் உள்ளிட்ட உக்காத பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும், தலதா...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நியமனம்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக கமல் அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின்...

பிரதமருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் சபாநாயகர் எழுத்து மூலம் விடுத்துள்ள அறிவிப்பு

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்படவுள்ள குழுவிற்கு உறுப்பினர்...