கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு விஹார மஹாதேவி பூங்காவில் இலங்கை இராணுவத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த தடுப்பூசி ஏற்றும் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பணிப்புரைக்கு அமைய இந்த தடுப்பூசி ஏற்றும் நிலையம் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையம் ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் தினமும் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை திறந்திருக்கும் எனவும் கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்தும் எந்தவிதமான தடுப்பூசியையும் இங்கு பெற்றுக்கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.