ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷ 109 வாக்குகளைப் பெற்று பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன கவிரத்ன 78 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அதற்கமைய 31 மேலதிக வாக்குகளால் அஜித் எம்.பி வெற்றி பெற்று பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.