follow the truth

follow the truth

February, 5, 2025
HomeTOP1பாராளுமன்றம் இன்று கூடுகிறது

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

Published on

புதிய பிரதமரின் நியமனத்தின் பின்னரான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெறவுள்ளது.

இதன்போது புதிய பிரதி சபாநாயகருக்கான தெரிவு இடம்பெறவுள்ளது.

இதற்காக ஐக்கிய மக்கள் சக்தி, பிரதி சபாநாயகர் பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவின் பெயரை பரிந்துரைக்கவுள்ளது.

அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அஜித் ராஜபக்ஷவின் பெயரை முன்வைக்க தீர்மானித்துள்ளது.

இதேவேளை, பிரதி சபாநாயகர் தெரிவின் போது ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்தியக் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அதன் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று பாராளுமன்ற அமர்வு ஆரம்பாகும் சந்தர்ப்பத்தில் உறுப்பினர்களுக்கான ஆசனத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படும்.

இதற்கமைய, இதுவரையில் எதிர்கட்சி ஆசனத்தில் இருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆளும் தரப்பின் பக்கம் ஆசனம் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பான குழுவின் விசேட கூட்டம் இன்று முற்பகல் 8.30 அளவில் இடம்பெறவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் பாராளுமன்ற குழுக்களின் செயல்பாடுகள் குறித்து முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித்...

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவு

ஜப்பானின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்பான பாராளுமன்ற துணை அமைச்சர் அகிகோ இகுயினா (Akiko Ikuina), பிரதமர் கலாநிதி ஹரிணி...

தேங்காய்ச்சில் சார்ந்த உற்பத்திகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை

200 மில்லியன் தேங்காய்களுக்குச் சமமான கொள்ளவைக் கொண்டுள்ள தேங்காய்ச்சில் சார்ந்த உற்பத்திகளையும் மற்றும் தேங்காயெண்ணெய் உற்பத்திக்குத் தேவையான உலர்...