நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
இதன்போது ,அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதி, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை, உர நெருக்கடி, எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை இன்றி மக்களுக்கு வழங்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பொருளாதார நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் குறித்து புதிய பிரதமர் ரணில் உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.