follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுஜனாதிபதியின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதியின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி

Published on

தற்போதைய சூழ்நிலையை கவனத்தில் கொண்டு, அனைவருக்கும் நியாயமான தீர்ப்பை வழங்கக்கூடிய ஒரு திட்டத்தை நோக்கி ஒன்றுபட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விசாக பூராணை தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று உன்னதமான நிகழ்வுகள் நடந்த மகத்தான விசாகப்பூரணை தினத்தை நினைவுகூர்ந்து, இலங்கை பௌத்த மக்கள் உட்பட உலகெங்கிலும் வாழும் பௌத்தர்கள் பூஜை வழிபாடுகள் மற்றும் புண்ணிய கிரியைகளில் ஈடுபடுகின்றனர்.

புத்த பெருமான் போதித்த போதனைகள் 2,500 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைபெற்றுள்ளது.

கடினமான சூழ்நிலைகளில் விடாமுயற்சியுடன் இருங்கள்.

நாடு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இந்த தருணத்தில் அனைத்துப் பிரஜைகள் சார்பாக, சகல மக்கள் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து, தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

முதன்மை இலக்கிலிருந்து விலகாமல் எதிர்பார்த்த இலக்கை அடைவதே ஒருமைப்பாட்டு இலக்காக இருக்க வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையை கவனத்தில் கொண்டு, அனைவருக்கும் நியாயமான தீர்ப்பை வழங்கக்கூடிய ஒரு திட்டத்தை நோக்கி ஒன்றுபட வேண்டும்.

கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஒழுக்கநெறியுடைய, சமயம் சார்ந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவதே அனைவரின் பொதுவான குறிக்கோளாக அமைய வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

No description available.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும் பிட்டிய வளைவுக்கு அருகில் இன்று (22) பிற்பகல் இரண்டு தனியார் பயணிகள் பஸ்கள்...

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை...

பொதுத் தேர்தல் – தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் அதிகரிப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலை விட எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக...