follow the truth

follow the truth

April, 23, 2025
Homeஉள்நாடுரிஷாட் பதியூதீனின் மாமனாருக்கு கொரோனா!

ரிஷாட் பதியூதீனின் மாமனாருக்கு கொரோனா!

Published on

ரிஷாட் பதியூதீனின் மனைவியின் தந்தைக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் தீ காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிஷாலியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்போது இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ரிஷாட் பதியூதீனின் மாமனாருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினால், அவரை பிணையில் விடுவிக்குமாறு, மனுவொன்றின் ஊடாக, அவரது சட்டத்தரணிகள் கொழும்பு மேலதிக நீதவான் லோச்சணி அபேவிக்ரமவிடம் இன்று கோரியிருந்தனர்.

எனினும், கொரோனாவை காரணம் காட்டி, சந்தேகநபரை பிணையில் விடுவிக்க முடியாது என கூறிய நீதவான், சந்தேகநபருக்கு சிகிச்சைகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இம்முறை தலவாக்கலையில் இடம்பெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் மே பேரணி

தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் (TPA) இணைந்து தலவாக்கலையில் மே தின பேரணி மற்றும் அணிவகுப்பை நடத்த ஐக்கிய மக்கள்...

டேன் பிரியசாத் கொலையில் மூவர் கைது

டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், டேன் பிரியசாத் சுட்டுக்...

நபர் ஒருவருக்கு மாதந்தோறும் தேவைப்படும் குறைந்தபட்ச தொகை

இலங்கையின் தேசிய புள்ளிவிவரத் திணைக்களம் 2025 பெப்ரவரி மாதத்திற்கான அதிகாரப்பூர்வ வறுமை வரம்பு தொடர்பான தரவுகளை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்...