follow the truth

follow the truth

April, 19, 2025
Homeஉள்நாடுநாட்டை மாத்திரம் முடக்குவதால் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது

நாட்டை மாத்திரம் முடக்குவதால் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது

Published on

மக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் நாட்டை மாத்திரம் முடக்குவதால் கொவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணா்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இது வாழ்க்கையுடனான போராட்டமாகும். எனவே அனைவரும் தமது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் இருப்பார்களாயின் அருகிலுள்ள தடுப்பூசி நிலையங்களுக்குச் சென்று அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணா்டோபுள்ளே வலியுறுத்தியுள்ளார்.

தற்போது பயன்படுத்தப்படுகின்ற சகல தடுப்பூசிகளும் கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற உதவும் என்று மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும், டெல்டா திரிபானது மிகவும் வேகமாக பரவக் கூடியது எனவும் சகலரும் தாமாகவே தம்மை பாதுகாத்துக் கொள்வார்களாயின் இவ்வாறு வைரஸ் பரவக் கூடிய வாய்ப்புக்கள் இருக்காது எனவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணா்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று...

கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,...

ட்ரம்பின் பரஸ்பர வரி : அமெரிக்கா பறந்தது இலங்கை தூதுக்குழு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அண்மையில் விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கையின் தூதுக்குழு ஒன்று அமெரிக்காவிற்கு...