follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுவன்முறைச் செயல்களில் ஈடுபட வேண்டாம் என பாதுகாப்புச் செயலாளர் கோரிக்கை

வன்முறைச் செயல்களில் ஈடுபட வேண்டாம் என பாதுகாப்புச் செயலாளர் கோரிக்கை

Published on

வன்முறைச் செயல்களில் ஈடுபட வேண்டாம் என பாதுகாப்புச் செயலாளர் நாயகம் கமல் குணரத்ன அனைத்து மக்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், ஜனநாயக ரீதியில் போராட்டம் வெற்றிபெற இளைஞர்கள் உழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில், பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவிக்கையில், “இவர்கள் அனைவரும் நமது நாட்டின் குடிமக்கள், இலங்கையர்கள், அதாவது, எங்கள் மக்கள், எனவே அவர்கள் அனைவரும் இலங்கையர்கள்.

எத்தகைய அரசியல் கருத்துக்களைக்கொண்டிருந்த போதிலும் எத்தகைய அரசியல் கட்சியை சார்ந்திருந்த போதிலும் இவர்கள் அனைவரும் இலங்கையர்கள்.எனவே இன்று இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் அன்பானவர்களிடம் நான் கேட்டுக்கொள்வது என்னவெனில் வன்முறையிலான செயற்பாட்டை நிறுத்துங்கள்.

இல்லையெனில் நம் நாட்டில் உள்ள சக குடிமக்களில் ஒரு பகுதியைக் கொன்று, நசுக்கி, எரித்து, அழித்துவிடலாம். இவ்வாறு எம்மிடமிருந்து சட்டத்தை நீங்கள் கையில் எடுத்தால் எமது நாட்டுக்கு எதிர்காலம் இல்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும் பிட்டிய வளைவுக்கு அருகில் இன்று (22) பிற்பகல் இரண்டு தனியார் பயணிகள் பஸ்கள்...

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை...

பொதுத் தேர்தல் – தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் அதிகரிப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலை விட எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக...