follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுகாலிமுகத்திடல் தாக்குதலை கண்டித்து கொழும்பு தேசிய வைத்தியசாலை ஊழியர்கள், சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

காலிமுகத்திடல் தாக்குதலை கண்டித்து கொழும்பு தேசிய வைத்தியசாலை ஊழியர்கள், சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

Published on

கொழும்பு –  காலி முகத்திடலில் அமைதியான முறையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதில் 23 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காலி முகத்திடலில் குவிந்துள்ள சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைச் சுற்றி கைகளைக் கோர்த்து அவர்களை பாதுகாத்து தமது ஆதரவை வெளிப்படுத்தினார்கள்.

அத்தோடு, ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணிகள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதேவேளை  கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்தில் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வைத்தியசாலை ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தபால் ஊழியர்களும் உடனடி வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...