களனி-தலுகம பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அந்த பகுதியில் உள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் நடவடிக்கைகளின் போதே இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன் போது மக்கள் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் கண்டி வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.