பாராளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில் பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக அந்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் வீதித் தடைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்தநிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் வீதித் தடைகளை மீறி உட்பிரவேசித்ததை அடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார் .
இதனால் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் வீதி பொல்துவ சந்தியில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.