2022 ஆம் ஆண்டிற்கான எல்லைகளற்ற நிருபர்கள் அறிக்கையின்படி, பத்திரிகை சுதந்திர சுட்டெண் தரவரிசையில் 146 வது இடத்திற்கு இலங்கை வீழ்ச்சியடைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் 127 வது இடத்தில் இருந்த இலங்கை 19 இடங்களை இழந்துள்ளது.
2009 வரை தீவை நாசப்படுத்திய உள்நாட்டுப் போருடனும், தமிழர் கிளர்ச்சியை நசுக்கிய போது பல ஊடகவியலாளர்களுக்கு எதிராக இன்னும் தண்டிக்கப்படாமல் விடப்பட்ட குற்றங்களுடனும் பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பிரச்சினைகள் நெருக்கமாகப் பிணைந்துள்ளன. ஊடகத் துறையில் பன்முகத்தன்மை இல்லாததாலும், முக்கிய அரசியல் குலங்களைச் சார்ந்திருப்பதாலும், பத்திரிகை ஆபத்தில் உள்ளது” என்று எல்லைகளற்ற செய்தியாளர்கள் தெரிவித்தனர்.