follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுசீனாவிடமிருந்து இலங்கைக்கு 300 மில்லியன் யுவான் நிதியுதவி

சீனாவிடமிருந்து இலங்கைக்கு 300 மில்லியன் யுவான் நிதியுதவி

Published on

மருந்து, உணவு, எரிபொருள் உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 300 மில்லியன் யுவான் நிதியை இலங்கைக்கு வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இரு நாடுகளின் பிரதமர்களுக்கும் இடையில் கடந்த மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலின் பலனாக இந்த நிதியுதவியை சீனா வழங்கவுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் சவால்கள் குறித்து சீனா அறிந்திருப்பதாக குறித்த கலந்துரையாடலின் போது, அந்நாட்டு பிரதமர் Li Keqiang, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சீனா தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் எனவும் சீன பிரதமர் கூறியுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிதியுதவியுடன் இலங்கைக்கு இதுவரை 500 மில்லியன் யுவான் நிதியுதவியை வழங்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...