குருநாகல் – ஹெட்டிபொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கர வண்டியொன்றும் டிப்பர் ரக வாகனமும் ஒன்றுடனொன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 17 மற்றும் 8 வயதுகளையுடைய இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.