இலங்கை போக்குவரத்து சபையினால் (SLTB) முன்னெடுக்கப்படும் தினசரி பஸ்களில் 80 வீதத்திற்கும் அதிகமான சுமார் 4,200 பஸ்கள் இன்று நண்பகல் 12.00 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.
சராசரியாக நாளொன்றுக்கு சுமார் 5,000 இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் சேவையில் ஈடுபடுவதாகவும், இன்று பயணிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டதால் பஸ்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கிங்ஸ்லி ரணவக்க மேலும் தெரிவித்தார்.