நாடளாவிய ரீதியில் நாளை(25) சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
எரிபொருள் விலையேற்றம், பஸ் கட்டணங்கள் மற்றும் பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் பொது மக்களின் கருத்துக்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் எனவும் இதன் காரணமாக நாளைய தினம் சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.