சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், பாராளுமன்றத்தை பிரதிநித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கான விசேட கூட்டம் இன்று(21) மாலை இடம்பெறவுள்ளது.
21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் இன்று(21) கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை வகுப்பதற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் யோசனைகள் அடங்கிய சட்டமூலம் சபாநாயகரிடம் இன்று(21) கையளிக்கப்பட்டுள்ளது.