பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.
தமது பயணத்தின் முதல் கட்டமாக குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு செல்லும் அவர், அங்குள்ள முன்னணி வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து இரு நாடுகள் இடையேயான வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்பு குறித்து விவாதிக்க உள்ளார்.
இதைத் தொடர்ந்து புதுடெல்லி திரும்பும் போரிஸ் ஜான்சன் நாளை பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
உக்ரைன் விவகாரம், இந்தோ-பசிபிக் பகுதி பாதுகாப்பு உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர்.
மேலும் இரு தரப்பு உறவுகள் பாதுகாப்பு, தொழில்நுட்பம் பொருளாதாரம், எரிசக்தி உள்ளிட்டவை குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இரு நாடுகள் இடையே சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றன.