follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுஇலங்கைக்கான சீனத் தூதுவர் - எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

இலங்கைக்கான சீனத் தூதுவர் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

Published on

இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhon மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான சந்திப்பொன்று நேற்று (19) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்தப் பேரிடர் தருணத்தில் இலங்கைக்கு சகோதரத்துவக் கரம் நீட்டும் சீனாவுக்கு தான் நன்றி தெரிவிப்பதாககூறிய எதிர்க்கட்சித் தலைவர் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நிலவி வரும் நீண்டகால இரு தரப்பு உறவுகளையும் அவர் இதன் போது நினைவு கூர்ந்தார்.

இலங்கையை தற்போதுள்ள நிலையில் இருந்து மீட்பதற்காக சீனாவின் பெருந்தன்மையான ஆதரவு மிகவும் அவசியமானது எனவும் இது தொடர்பில் தலையீடு செய்யுமாறும் தூதுவரிடம் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள இராஜதந்திர உறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது கலந்துரையாடலுக்குட்படுத்தப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (20)...

மொனராகலையில் பஸ் கவிழ்ந்து விபத்து – 17 பேர் வைத்தியசாலையில்

மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் கும்புக்கனையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...