follow the truth

follow the truth

October, 22, 2024
HomeUncategorizedஜனாதிபதியால் மாத்திரமே சிரித்துக்கொண்டு மனித படுகொலை செய்ய முடியும் - அனுர குமார திசாநாயக்க...

ஜனாதிபதியால் மாத்திரமே சிரித்துக்கொண்டு மனித படுகொலை செய்ய முடியும் – அனுர குமார திசாநாயக்க (VIDEO)

Published on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நாட்டு மக்கள் மீது எவ்விதமான அக்கரையும் இல்லையெனவும், அவரால் மாத்திரமே சிரித்துக்கொண்டே மனித படுகொலை செய்ய முடியுமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், நாட்டு மக்கள் இன்று ஒருவேளை உணவின்றி பட்டினியால் வாடி வருகின்றனர். ஆனால் இந்த அரசுக்கு அதைப்பற்றி கவலையில்லை. வீதியில் போராட்டத்திற்கு வரும்போது அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதாக தெரிவித்தார்.

பட்டினியால் ஏற்பட்டுள்ள வேதனையே இன்று இவ்வாறு போராட்டமாக வெடித்துள்ளது. மக்களின் போராட்டம் சாதாரணமானது, அவர்களது கோபமும் நியாயமானது. நாளை பிரச்சினை தீருமா, அல்லது நாளை மறுதினம் தீருமா என்று மக்கள் தினமும் சிந்தித்து வருகின்றனர்.

தயவு செய்து மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதை உடனடியாக நிறுத்துங்கள். துப்பாக்கி ஊடாக எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது. எனவே அனைத்து பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்வதாகவும் அனுரகுமார திசாநாயக்க எம்.பி இதன்போது தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிற்சாலையில் வெடிப்பு – ஒருவர் பலி

படல்கம, திவுலப்பிட்டிய பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த தொழிற்சாலையின் கொதிகலன்...

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தொகுதி வாரியாக நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக

இன்று (21) ஆரம்பமான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக தொகுதி வாரியாக வெளியிடப்படும் என...