”மக்களை துன்புறுத்தும் ஆட்சியாளர்களை விரட்டியடிப்போம்” என்ற தொனிப்பொருளில் எதிர்ப்புப் பேரணியொன்று இன்று(19) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மொறட்டுவையிலிருந்து கொழும்பு நகர மண்டபம் வரை இந்த பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.
தற்போது காணப்படும் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் அரசாங்கத்தை விரட்டியடித்து, மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசாங்கம் ஒன்றை கட்டியெழுப்புவோம் என்ற அடிப்படிடையில் இந்த பேரணி முன்னெடுக்கப்படுகின்றது.
நேற்று முன்தினம்(17) பேருவளையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த எதிர்ப்புப் பேரணி, இறுதி நாளான இன்று(19) கொழும்பு நகர மண்டபத்தை வந்தடையவுள்ளது.