கடந்த 10 நாட்களாக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம் தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கொழும்பு பிரதான நீதவானிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் காரணமாக குறித்தப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த செயற்பாடானது பொது மக்களின் பாதுகாப்பிற்கு தடையாக காணப்படுவதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள பலர் சுகயீனம் அடைந்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் குறித்தப் போராட்டத்தில் முரண்பாடுகள் ஏற்படுமாயின் B அறிக்கை சமர்ப்பிக்கப்படுமெனவும் கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.