அமைச்சரவைப் பதவியை ஏற்கப் போவதில்லை என்ற தனது தீர்மானத்தில் உறுதியாக நிற்கப் போவதாக முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைப் பதவியை ஏற்கமாட்டேன் என்ற எனது முடிவில் (ஏப்ரல் 3ஆம் தேதி) நான் உறுதியாக நிற்கிறேன். இந்த இக்கட்டான தருணத்தில் பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கம் சிறந்த தெரிவாக இருக்கும் என நான் நம்புகிறேன். வரலாறு அதற்கு சாட்சி. வலுமிக்க இளைஞர் அமைச்சரவையை விரைவில் நியமிக்க எனது வாழ்த்துகள்” என முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ட்வீட் செய்துள்ளார்.
I stand by my decision (made on 3rd April) not to accept a cabinet position. I believe a government consisting all parties in Parliament will be the best option at this critical juncture. History bears witness to it. Wish my best to soon to be appointed youth heavy new cabinet. pic.twitter.com/TRUIeXRQYA
— Dullas Alahapperuma (@DullasOfficial) April 17, 2022
அமைச்சரவை அமைச்சுப் பதவியை ஏற்கப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர இன்று அறிவித்துள்ளார்.