மத்திய வங்கியின் ஆளுநர், நிதியமைச்சின் செயலாளர் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களுக்காக வொஷிங்டன் செல்ல தயாராக உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
குறித்த குழு எதிர்வரும் 18ஆம் திகதி இவ்வாறு வொஷிங்டன் நோக்கி பயணமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.