follow the truth

follow the truth

April, 18, 2025
Homeஉள்நாடுஇரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேற்றம்!

இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேற்றம்!

Published on

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்விலிருந்து இரு  எம்.பி.க்களை  வெளியேற்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நடவடிக்கை எடுத்துள்ளாா்.

குறித்த இரு எம்.பிக்களையும் சபையிலிருந்து  வெளியேற்றுவதற்கென  நாடாளுமன்ற அமர்வு மீண்டும் சிறிது நேரத்துக்கு  இடைநிறுத்தப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி ஆகிய இருவருமே இவ்வாறு சபையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனா்.

நாடாளுமன்ற அமர்வை ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவால் அறிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து, மீண்டும் சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்டபோது சபாநாயகர் இந்த முடிவை அறிவித்தாா்.

சபை அமர்வுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமையின் காரணமாகவே இவர்கள் இருவரும் வெளியேற்றப்படுவதாக சபாநாயகர் சபையில் அறிவித்தாா்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த ஆண்டில் டெங்கு காய்ச்சலால் 5 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 5 பேர் உயிரிழந்ததோடு, 14,678 டெங்கு நோயாளர்கள் அடையாளம்...

“ஸ்ரீ தலதா வழிபாடு” – சமூக ஊடகங்களில் பரவும் போலி அழைப்பிதழ்

“ஸ்ரீ தலதா வழிபாடு” நிகழ்வின் ஆரம்ப விழாவில் பங்கேற்குமாறு சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் அழைப்பிதழ் போலியாக உருவாக்கப்பட்டது...

“ஸ்ரீ தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வு – இராஜதந்திரிகள் கண்டிக்குப் பயணம்

16 வருடங்களின் பின்னர் இம்முறை இடம்பெறும் “சிறி தலதா வழிபாடு” நிகழ்வின் ஆரம்ப விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று...