நாடளாவிய ரீதியல் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தின் காரணமாக கடந்த 3ம் திகதி பிற்போடப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆர்ப்பாட்டம் , இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து தலவாக்கலையில் இடம்பெறவுள்ளது.
இந்தப் போராட்டத்தில், கட்சி, தொழிற்சங்க பேதமின்றி அனைவரும் பங்கேற்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.