follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுவாகனத்திற்குள் நுழைந்த நபர் குறித்து அனுரகுமார எம்.பியின் பதில்

வாகனத்திற்குள் நுழைந்த நபர் குறித்து அனுரகுமார எம்.பியின் பதில்

Published on

தன்னுடைய பாதுகாப்புக்காக வருகைத் தந்த கட்சி ஆதரவாளர்களில் ஒருவரே வாகனத்திற்குள் நுழைந்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நேற்று இலக்கத்தகடுகள் இன்றி நாடாளுமன்றிற்குள் பிரவேசித்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் விவாதங்கள் இடம்பெற்றுவந்த நிலையில், அனுர குமார எம்.பியின் வாகனத்திற்குள் நுழைந்த நபரும் இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது பேசும் பொருளாக காணப்பட்டிருந்தது.

ஆளுங்கட்சி பிரதான கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கும் விஜித ஹேரத் எம்.பிக்கும் இடையே இது குறித்து நீண்டநேரமாக காரசாரமான வாதங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த தருணத்தில் அனுர குமார எம்.பி சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

இதனையடுத்து, சபைக்குள் பிரவேசித்த அனுரகுமார எம்.பி. தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே இந்த விடயத்தை வெளியிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும் பிட்டிய வளைவுக்கு அருகில் இன்று (22) பிற்பகல் இரண்டு தனியார் பயணிகள் பஸ்கள்...

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை...

பொதுத் தேர்தல் – தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் அதிகரிப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலை விட எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக...