மொரட்டுவ நகர மேயர் சமன்லால் பெர்னாண்டோவின் இல்லத்தின்மீது பேரணியாக வந்த சிலர் தாக்குதல் மேற்கொண்டதால் அங்கு பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து கலகம் அடக்கும் பொலிஸார் அங்கு கடமைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் அவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.