follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுதனியார் பஸ்  சேவையை மட்டுப்படுத்த தீர்மானம்!

தனியார் பஸ்  சேவையை மட்டுப்படுத்த தீர்மானம்!

Published on

இன்றைய தினம் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவது குறைவடையக்கூடும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய டீசல் தட்டுப்பாடு காரணமாக, 15 சதவீதமான தனியார் பஸ்களே நேற்றைய தினம் சேவையில் ஈடுபட்டதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், டீசல் இன்மையால், இந்த நிலைமை இன்று மேலும் வீழ்ச்சியடையக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

10 முதல் 15 சதவீதமளவில் இன்றைய தினம் பஸ்கள் சேவையில் ஈடுபடும். வரிசைகளில் காத்திருந்து பேருந்துகளுக்கு நிரப்பிய டீசல் இன்றைய தினத்துடன் தீர்ந்து போகும்.

எனவே, டீசலைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடயத்துடன் தொடர்புடைய அமைச்சரிடம் கோரியுள்ளாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...