follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுகொவிட் சிகிச்சை நிலையங்களில் மோசடி : உடனடியாக விசாரிக்குமாறு வட மாகாண ஆளுநருக்கு பிரதமர் பணிப்புரை

கொவிட் சிகிச்சை நிலையங்களில் மோசடி : உடனடியாக விசாரிக்குமாறு வட மாகாண ஆளுநருக்கு பிரதமர் பணிப்புரை

Published on

யாழ்ப்பாணம் கொவிட்  சிகிச்சை நிலையங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.

வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவிற்கு பிரதமரால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மூன்று தற்காலிக சிகிச்சை நிலையங்களில் காணப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் காணாமற்போயிருந்தமை கணக்காய்வு அறிக்கையில் அம்பலமாகியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் கண்காணிப்பில் இந்த கொரோனா சிகிச்சை நிலையங்கள் செயற்பட்டு வந்தன.

வட மாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் பல ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருகின்றமை குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும் பிரதமரின் ஊடகப் பிரிவினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...