கல்முனை மாநகர சபையின் புதிய ஆணையாளராக என். சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அவர் நாளை கல்முனை மாநகர சபையில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார்.
கல்முனை மாநகர ஆணையாளராக செயற்பட்ட ஏ.சீ. அன்சார், கிழக்கு மாகாண பிரதம செயலாளரின் அலுவலகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது