இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப்பதவிக்கு, செந்தில் தொண்டமானை, காங்கிரஸின் தேசிய சபை இன்று ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது.
அத்துடன், நிதி செயலாளர் பதவியை வகித்த மருதபாண்டி ராமேஷ்வரனுக்கு கட்சியின் தவிசாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை இன்று கூடியது. இதன்போதே இவ்விரு பதவிகளுக்கும் போட்டியின்றி தெரிவு இடம்பெற்றது.