மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலங்களில், தொலைத்தொடர்பு கோபுரங்களை செயற்படுத்துவதற்கு தேவையான டீசலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குறித்த கோபுரங்களை செயற்படுத்துவதற்காக நேற்று(29) 3,000 லீட்டர் டீசல் மின்பிறப்பாக்கிகளுக்கு விடுவிக்கப்பட்டதாக அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.