follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுதெமட்டகொட ருவானுக்கான பிணை மனு மீதான விசாரணைகள் ஆரம்பம்

தெமட்டகொட ருவானுக்கான பிணை மனு மீதான விசாரணைகள் ஆரம்பம்

Published on

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ருவன் சமில பிரசன்ன என்றழைக்கப்படும் தெமட்டகொட ருவானுக்கு பிணை வழங்குவது மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை கைது செய்வதை தடுக்கும் நோக்கில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதற்காக பல்வேறு நபர்களின் பெயர்களைப் பயன்படுத்தி இரண்டு சிவிலியன்களினால் 15 மில்லியன் ரூபா பெறப்பட்டதாகவும், குறித்த பிரிவிலுள்ள சார்ஜன்ட் ஒருவருடன் குறித்த இருவரும் தொடர்புகளை பேணி வருவதாகவும் தெமட்டகொட சமிந்தவின் மகன் தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மோசடி இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, பணம் பெற்றதாக கூறப்படும் நபர்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் இடமாற்றம் செய்யப்பட்டு முதற்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், பெறப்பட்ட பணம் அரச சட்ட உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவ்வாறான சம்பவம் எதுவும் வெளியாகவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...