follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுரயில் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

ரயில் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

Published on

ரயில் கட்டணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் போது ரயில் கட்டணங்கள் 58 வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி புகையிரத போக்குவரத்தின் போது மூன்றாம் வகுப்புக்காக முதல் பத்து கிலோமீட்டருக்கு ஒரு ரூபா முப்பது சதமாக காணப்பட்ட ரயில் கட்டணம் இரண்டு ரூபாவாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்டணம் அதிகரிக்கப்படும் போது ரயில் கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நான்கு தடவைகள் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்ட போதும் ரயில் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து இவ்வாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் புகையிரத கட்டண திருத்தத்திற்கான அனுமதியைப் பெற்று அதன் பின்னரே கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என்றும் , எவ்வாறிருப்பினும் பாரியளவில் கட்டணங்களை அதிகரிக்க எதிர்பார்க்கவில்லை என்றும் போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேல்மாகாண வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சாளரங்கள் இன்று மூடப்படும்

மேல்மாகாணத்தில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து அனுமதிச் சாளரங்களும் இன்று மூடப்படும் என மேல்மாகாண சபை தெரிவித்துள்ளது. ஏனெனில் ஜனாதிபதி...

“கஞ்சிபானியின் பெயரே KPI என எழுதப்பட்டது”

அதுருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை கொல்ல...

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்த...