follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுபுதுவருடத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

புதுவருடத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

Published on

எதிர்வரும் புது வருடத்தை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்பவர்களுக்காக விசேட போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

திட்டத்தின் கீழ் 24 மணித்தியாலங்களுக்கு நடைமுறையில் இருக்கும் வகையில் விசேட நடவடிக்கை பிரிவொன்றை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தரமான பஸ் சேவையை முன்னெடுத்துச் செல்வதற்கென நடமாடும் கண்காணிப்பு அதிகாரிகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புத்தாண்டு காலத்தில் பஸ் வண்டிகளில் சன நெரிசலை குறைக்கும் வகையில் பஸ் சேவை முன்னெடுக்கப்படும்.

பயணிகளின் பாதுகாப்பு , உணவு, நீர் மற்றும் சுகாதார பாதுகாப்பு உள்ளிட்ட பொது வசதிகள் குறைவின்றி வழங்கப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடவத்தை மற்றும் கடுவெல, பஸ் முனையங்கள் மற்றும் மாகும்புற பல்நோக்கு இடைமாற்று மத்திய நிலையத்திலும் குறித்த காலப்பகுதியில் அவ்வாறான சேவை மற்றும் வசதிகள் வழங்கப்படும். இரண்டாவது கட்டத்தின் கீழ் கொழும்பு மற்றும் சன நெரிசல் மிக்க பிரதேசங்களுக்கு மீள வருகை தரும் போது பயணிகளின் கேள்விகளை கருத்திற்கொண்டு தற்காலிக அனுமதி பத்திரத்தின் கீழ் பஸ் சேவையை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...