பேராதனை போதனா வைத்தியசாலையில் வழமையான சத்திரசிகிச்சைகளை தற்காலிகமாக ஒத்திவைக்க எடுக்கப்பட்ட தீர்மானம் மீளப்பெற்றுள்ளதாக அவ்வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மருத்துவ வழங்கல் பிரிவினால், மருந்து பொருட்கள் வழங்குவதை உறுதிப்படுத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.