follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுதமிழர் தரப்பை சந்திக்கிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்

தமிழர் தரப்பை சந்திக்கிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்

Published on

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தமிழ் தரப்பு பிரதிநிதிகளை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அதன்படி தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது இலங்கை விஜயத்தின் போது சந்திக்கவுள்ளார்.

இன்று திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகளை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

இந்திய இல்லத்தில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் அதன் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு, புதிய அரசியல் அமைப்பு உருவாக்க செயற்பாடு, 13 ஆவது திருத்தச்சட்ட அமுலாக்கம், வடக்கு மீனவர் விவகாரம், வடக்கு, கிழக்கு அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பேசப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மேலும்  தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதிநிதிகளையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் தமிழ் முற்போக்குக் கூட்டணி தயாரித்துள்ள ஆவணம் குறித்தும் ஆராயப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...