follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுகொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படவுள்ள பொது இடங்கள் விரைவில் அறிவிப்பு

கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படவுள்ள பொது இடங்கள் விரைவில் அறிவிப்பு

Published on

முழுமையான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டை கட்டாயமாக்கப்படவுள்ள பொது இடங்கள் தொடர்பான பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

எதிர்வரும் நாட்களில் குறித்த பட்டியல் வெளியிடப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் இதுவரையில் 14.4 மில்லியன் மக்கள் முதல் இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.

எனினும் அவர்களில் 7.7 மில்லியன் மக்களே பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக அடுத்த 2 வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட பொது இடங்களுக்கு செல்லும் போது குறித்த தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படவுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அவ்வாறான பொது இடங்கள் தொடர்பான பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

இதற்கமைய ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு பின்னர் முழுமையாக தடுப்பூசி பெற்றவர்கள் மாத்திரமே இவ்வாறான பொது இடங்களுக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

20 வயதுக்கு மேற்பட்டோர் மூன்று தடுப்பூசிகளையும் பெற்றிருந்தால் மாத்திரமே அது முழுமையான தடுப்பூசியான கணக்கில் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...