follow the truth

follow the truth

March, 14, 2025
Homeஉள்நாடுசட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது

Published on

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பு பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 8 பேரை ஹட்டன் பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது.

ஹட்டன் விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரேமலால் தலைமையில் நேற்று (25) இரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த 8 பேரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு சில உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.

கைது செய்யபட்ட 8 பேரும் மஸ்கெலியா, நோர்வூட், பொகவந்தலாவை, ஹட்டன் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் 8 பேரையும் இன்றைய தினம் (26) ஹட்டன் நீதவான் முன்னிலையில் அஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அட்டன் விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேக நபர் விளக்கமறியலில்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக...

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

மூதூர் - தாஹாநகர் பகுதியில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இருவரினதும் பேர்த்தியான 15 வயது சிறுமி...

எம்.பி பதவியை இராஜினாமா செய்தார் சாலி நளீம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் சாலி நழீம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தவதாக...