வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் பிரெஞ்சுக் குடியரசின் செனட்டர்கள் குழுவை நேற்று(24) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன் போது, சுகாதாரச் சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, கல்வி மற்றும் கலாச்சாரத் துறைகளிலான ஒத்துழைப்பிற்கு முக்கியத்துவம் அளித்து, அரசியலமைப்பு சீர்திருத்தம், இலங்கையில் பிரெஞ்சு நிறுவனங்களின் முதலீடு, இலங்கையில் இருந்தான பெறுமதி சேர்க்கப்பட்ட ஏற்றுமதிக்கான சந்தைகளை பிரான்சில் விரிவுபடுத்துதல் (குறிப்பாக தேயிலை, மீன்பிடிப் பொருட்கள், ஆடைகள், இரத்திணங்கள் மற்றும் ஆபரணங்கள்), மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
இலங்கைக்கும் பிரான்ஸ் குடியரசிற்கும் இடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருவதாக பிரான்ஸ் செனட்டர்கள் இதன்போது தெரிவித்தனர்.